tamilnadu

புதுக்கோட்டை,. இராமநாதபுரம் , கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, அக்.26- விபத்தில்லாத மற்றும் பாதுகாப் பான தீபாவளி கொண்டாட்டத்திற்கு நீதி மன்றம் மற்றும் தமிழக அரசின் வழி காட்டுதல்களை பொது மக்கள் அனை வரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது. தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஏற்படுத்தி இருக்கிறது. தீயணைப்பு ஊர்திகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு நிலை யங்களிலுள்ள அவசரகால மீட்பு உப கரணங்கள் எல்லாம் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளது மட்டுமின்றி விபத்து நடக்கும் இடத்திற்கு எவ்வித காலதாமதமுமின்றி விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.  பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக புதுக்கோட் டை நகரை பொருத்தவரை 101 மற்றும் 04322- 222399, 04322-261011, 04322-244501, 04322- 275743, 04322-251350, 04322-258101, 04333-274258,04333-262088, 04333-270101, 04371-233441, 04371-295225,04339-262210, 04339-272433, 04371-242101 ஆகிய தொலை பேசி எண்கள் 24 மணிநேரமும் இயங் கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மேலும், உதவி மாவட்ட அலுவலர் மற்றும் நிலைய தீயணைப்பு அலுவ லர்களை தொடர்பு கொள்ள 9445086448, 9445086451, 9445086461, 9445086455, 9445086452, 9445086458, 9445086462, 9445086460, 9445086453, 9445086454, 9445086457, 9445086459, 9445086456, 9445086533, 9445086449, 9445086450 ஆகிய கைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். அதிக மக்கள் தொகை உள்ள புதுக்கோட்டை நகரம், அறந்தாங்கி, பொன்னமராவதி, திருமயம், கந்தர்வக் கோட்டை போன்ற தாலுகாக்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டு தீயணைப்பு வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை விபத்தில் லாத பாதுகாப்பான பண்டிகையாக கொண்டாடு பொது மக்கள் அனைவ ரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆர்.எஸ்.மங்களம் அருகே கிராம மக்கள் அமைத்த பாலம்

இராமநாதபுரம், அக்.26- இராமநாதபுரம் மாவ ட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை ஊரா ட்சியில் மேலமடை, கீழ மடை கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 50-க்கும் மேற்ப ட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமங்களுக்கு ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயைக் கடந்து செல்லும் சாலையில் இருந்து  பிரிந்து சென்று கொக்கூ ரனி வழியாகப் பிரிந்து செல்கிறது. பிரிவு சாலையின் குறுக்கே கோட்டக்கறை ஆறு செல்வதால் மக்கள், வாகன ஓட்டிகள் ஆற்றைக் கடப்பதற்கு சிரமப்பட்டனர்.  தற்போது பெய்து வருவதால் மழைநீர் வடி யாமல் சேறும் சகதியுமாக காட்சியளித்து சுகாதாரக்கேடு ஏற்பட்டது.  இது குறித்து கிரா மமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு தற்காலிகமாக மூன்று தூம்புகளை அமைத்துவிட்டு அந்தப் பணியே பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்வதற்குக்கூட வாகனங்கள் ஊருக்குள் வர முடியவில்லை இதனால் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய  நிலை இருந்து வந்தது. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காகவில்லை. 

52 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு

திருநெல்வேலி, அக்.26- பிசான பருவ நெல் சாகுபடிக்காக களக்காடு, ஏர்வாடி, பத்ம னேரி வேளாண் விரிவாக்க மையங்களில் 52 மெட்ரிக் டன் நெல்  விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்கு நர் தி. பரிமளம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி ப்பில், களக்காடு வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. பிசான பருவ நெல் சாகுப டிக்கு தேவையான நெல் விதை மற்றும் உயிர் உரங்கள், வேளா ண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு ள்ளன. களக்காடு, ஏர்வாடி, பத்மனேரி வேளாண் விரிவாக்க மைய ங்களில் 42 மெட்ரிக் டன் திருப்பதிசாரம் -5 ரக நெல் விதையும், 10 மெட்ரிக் டன் டி.கே.எம். 13 ரக நெல் விதையும் இருப்பு உள்ளது. திருப்பதிசாரம்-5 நெல்விதை 105 நாள்கள் வயது டைய உயர் விளைச்சல் ரகமாகும். டி.கே.எம்.13 நூற்றி முப்பது  நாள்கள் வயதுடைய உயர் விளைச்சல் ரகம். மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர்  உரங்களும், நெல் நுண்ணூட்டம் ஆகிய இடுபொருள்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.

தையாலுமூட்டில் புதிய  ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு

நாகர்கோவில், அக்.26- கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சிஐடியு) தையாலுமூடு ஸ்டாண்ட் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவுக்கு, கிளைத்தலைவர் பி.எஸ்.சுனில் ராஜ் தலை மை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ் பெ யர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.மார்க்சி ஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தங்கமணி,முன்னாள் பஞ்சாயத்து உதவித்தலைவர் ராஜ்,முந்திரி சங்க நிர்வாகி பத்மநாபபிள்ளை, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ யன் ஆகியோர் பேசினர். ராபர்ட், டேவிட்ராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.