tamilnadu

புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சுகாதார ஆய்வாளரை மிரட்டியதாக புகார் 
பொன்னமராவதி, டிச.22-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமர கண் டான் மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக தியாக ராஜன் (51) பணியாற்றி வருகிறார். இவர், பொன்னமராவதி காவல்துறையில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, அமர கண்டான் மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம் வளுத்தார் ரம்யா பழனியப்பன் என்பவருக்கு பிறப்புச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த ஆய்வாளர் தியாக ராஜன் விசாரித்த போது அக்குழந்தை பொன்னமராவதி தனி யார் மருத்துவமனையில் பிறந்து பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் பிறந்ததாக சான்று பெற்று உள்ளனர்.  இதையடுத்து தியாகராஜன் ரம்யாவிடம் நடந்த தவறு களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த  17ம் தேதி தியாகராஜன் மருத்துவமனை உள்ளே சென்ற போது தவறான சான்று பெற்றதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் துணை செவிலியர் கீதா தகாத வார்த்தைகளால் திட்டியும் கூலிப்படையை வைத்து மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி காவ லர்கள் விசாரிக்கின்றனர்.

ஆற்று நீரில் மூழ்கி மீனவர் பலி
சீர்காழி, டிச.22- நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கமல நாதன் மகன் பசுபதி(18), மீனவர். இவர் கடந்த 19 ந் தேதி தனது நண்பர்கள் நான்கு பேருடன் கொள்ளிடம் ஆற்றில் பைபர் படகின் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது படகிலிருந்து தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி விட்டார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. இது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய முறைப்படி வார்டு வரையறை செய்திட வலச்சேரிக்காடு மக்கள் கோரிக்கை 
தஞ்சாவூர், டிச.22- தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம் பலம் ஊராட்சியில் உள்ள வலச்சேரிக்காடு கிராமம் வார்டு எண் 1 ல் இருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வார்டு வரையறைகள் செய்த போது வலச்சேரிக்காடு கிராமம், சிற்றூராட்சி வார்டு எண் 4 மற்றும் 9 ல் சேர்க்கப்பட்டது.  2011 ஆம் ஆண்டு உள்ளாட்சிகள் தேர்தல் நடைமுறைப்படி, வார்டு எண் 1ல் பழைய நிலையில் உள்ளபடியே தேர்தல் நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தற்சமயம் நிறைவு பெற்று விட்டதால், பழைய நடை முறைப்படி தேர்தல் நடத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என அதிகாரி கள் தரப்பில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தேர்தலை புறக்க ணிப்பு செய்வதாக வலச்சேரிக்காடு கிராம மக்கள் அறிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், கிராம மக்களுடன் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள் பிரகாசம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணை யர் சடையப்பன் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் ஜனவரி மாதம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பழைய முறைப்படி வார்டு வரையறைகள் செய்வதாக கிராம மக்களிடம் அதிகாரி கள் உறுதி அளித்தனர்.  அதனைத் தொடர்ந்து, தேர்தல் புறக்கணிப்பை வலச்சேரிக்காடு கிராம மக்கள் கைவிட சம்மதித்தனர். அமைதி பேச்சு வார்த்தையில், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி, உதவி ஆய்வா ளர் கர்ணன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், வலச்சேரிக்காடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.