அவிநாசி, ஆக. 22- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ப.சிதம்பரத் தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து புலனாய்வுத் துறையினர் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடாசலம், அவிநாசி நகரத் தலைவர் கோபாலகிருஷ் ணன், வட்டாரத் தலைவர் மணி, மாணிக்கம், சாய் கண்ணன் மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண் டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
தாராபுரம்
இதேபோல், தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவல கம் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பிரனீஸ்பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபால் கண்டன கோசங்களை எழுப்பி னார். குண்டடம் வட்டார தலைவர் ரத்தினசாமி, தாராபுரம் வட்டார தலைவர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு காங் கிரஸ் கட்சியின் நகர தலைவர் கோ.ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.