tamilnadu

img

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு கண்டித்து போராட்டம்

பொன்னமராவதி, ஜூன் 25- பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி பொன்ன மராவதியில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஏ.தீன் ஒருங் கிணைப்பில் நான்கு இடங்களில் சிஐடியு சார்பில் ஆட்டோ மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பட்ட மரத்தான் மினிடோர் ஓட்டுநர், உரி மையாளர் சங்க கிளை சார்பில் கிளை செயலாளர் சி.ஆறுமுகம் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. டாக்ஸி மார்க்கெட்டில் கிளை பொறுப்பாளர் நாகராஜன் தலைமை யிலும், பொன்னமராவதி காந்தி சிலை அருகே ஆட்டோ ஓட்டுநர்கள்- உரிமையாளர் சங்க கிளை சார்பில் கிளை பொருளாளர் அப்பாஸ் தலைமையிலும், கோவனூரில் கிளைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லம் கடைவீதியில் உள்ள பெரியார், அண்ணா சிலை அருகே இரு இடங்களில் சாலை போக்குவரத்து சங்கத்தின்-சிஐடியு சார்பாக நாள் தோறும் விலை உயரும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.சீனி வாசன் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ தலைவருமான வி.எஸ். கலியபெருமாள் டீசல் பெட்ரோல் உயர்வை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா நிவாரணமாக ஓட்டுநருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் அனைத்து வாகனங்களுக்கும் இன்சுரன்ஸ், சாலை வரி, எப்சி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் பி.தங்கபாண்டியன், பொருளாளர் எம்.கே.ஜெய்சங்கர், துணை செயலாளர் தங்க ஜிவா, சிஐடியு துணை செயலாளர் கு.முனி யான்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.