அறந்தாங்கி, ஜூன் 27- புதுக்கோட்டை மாவட்டம் மனமேல் குடியில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் கண்டன உரையாற்றினார். குணசேகரன், பழனி உள்ளிட்டோர் கலந்து கொன்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், விவ சாயத் தொழிலாளர்களுக்கு ரூ.7500, விவசா யிகளுக்கு ரூ.10 ஆயிரம், மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தப்பட்டன.