tamilnadu

img

கறம்பக்குடி அருகே கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.2- புதுக்கோட்டை மாவட்டம் கறம்ப க்குடி அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே வீட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி யையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தி ற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க சிபிஎம் வலியு றுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்ப க்குடியில் செட்டித்தெரு விட்டல்தாஸ்  நகரைச் சேர்ந்த தம்பதியர் குமார்- ராஜேஸ்வரி. இருவரும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியா ளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.  வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களுக்கு  கிருத்திக்ரோஷன்(6), அரவிந்த்(5) என்ற 2 மகன்கள் உள்ள னர். இந்நிலையில், கடந்த சனிக்கி ழமை வீட்டின் அருகே உள்ள கழிவு நீர் தொட்டியின் மேல் ஏறி இருவரும் விளையாடியுள்ளனர்.

எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டி உடை ந்து இருவரும் உள்ளே விழுந்துள்ள னர், விளையாடிக் கொண்டிருந்த சிறு வர்களை காணாததால் பெற்றோர் பல  இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்த்தபோது தொட்டி உடைந்து இருந்ததும், அதற்குள் இருவரும் இருந்ததும் தெரியவந்துள்ளது. இருவரையும் மீட்ட உறவி னர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அவ ர்களை பரிசோதித்ததில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மரு த்துவர்கள் தெரிவித்தனர். இதனை யடுத்து உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் உட ற்வராய்வுக்காக புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்த சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
உடற்கூராய்வுக்குப் பிறகு ஞாயி ற்றுக்கிழமை சிறுவர்களின் உடல்கள் கறம்பக்குடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவர்களின் உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறு ப்பினர்கள் வீரமுத்து, அரிபாஸ்கர், மாதவன், முருகதாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து எஸ்.சங்கர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், அரசு புறம்போக்கு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இந்த கழிவுநீர்த் தொட்டியை அமைத்துள்ளனர்.

அருகிலேயே குடிநீருக்கான ஆழ்து ளைக் கிணறும், நீர்த்தெக்கத் தொட்டி யும் உள்ளது. இத்தகைய சூழலில்  தனியார் அந்த இடத்தில் கழிவுநீர்த்  தொட்டியை அமைக்க கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனு மதித்தது? பேரூராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்ப த்திற்கு ரூ.20 லட்ச ரூபாய் இழப்பீ டும், ஒப்பந்த அடிப்படையில் துப்புர வுத் தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

;