அறந்தாங்கி, செப்.18- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் சார்பில் ஓசோன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை முகாம் நடைபெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் தலைமை வகித்தார். அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். வெண்ணாவல்குடி, சிதம்பரவிடுதி, கோபாலபட்டிணம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உட்பட 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட பள்ளிகளுக்கு மரம் வளர்க்க சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 5 ஆயிரமும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை இணை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.