tamilnadu

img

மார்ச் 19-ல் சத்துணவு ஊழியர்கள் புதுகையில் பெருந்திரள் முறையீடு

புதுக்கோட்டை, மார்ச் 7- சத்துணவுத் திட்டத்தை தனியார்மய மாக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் வருகின்ற மார்ச்.19 அன்று பெரு;நதிரள் முறையீடு ஆர்ப்பாட்டத் தை புதுக்கோட்டையில் நடத்த உள்ளனர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலை மையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெ. அன்பு, பொருளாளர் வி.அன்னபூரணம் ஆகி யோர் அறிக்கைகளை முன்மொழிந்து பேசி னர். மாநில செயலாளர் ஏ.மலர்விழி சிறப்பு ரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் துரை. அரங்கசாமி, கு.ராஜமாணிக்கம், கிருஷ்ணவேணி, சீத்தாலெட்சமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். சத்துணவுத் திட்டம் தனியார்மயம் நோக்கி செல்வதைக் கண்டித்து வருகின்ற மார்ச்.13 அன்று ஒன்றியத் தலைநகரங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, திட்டத்தை ஒருபோதும் தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்டத் தலைநகரமான புதுக்கோட்டையில் வருகின்ற மார்ச்.19 அன்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்துவது கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.