tamilnadu

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடியேற்று விழா

புதுக்கோட்டை, நவ.07- கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடியேற்றி கொண்டாடப்பட்டது. கட்சியின் புதுக்கோட்டை மாவட் டக்குழு அலுவலகத்தில் கட்சியின் செங்கொடியை ஏற்றிவைத்து மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் புரட்சிதின உரை நிகழ்த்தினார். மேலும், அரசுப் போக்குவரத்து கிளை அலுவலம் மற்றம் 4 இடங்களி லிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ.ஸ்ரீதர், ஏ.அன்புமணவா ளன், நகரச் செயலாளர் சி.அடைக்கல சாமி மாவட்டக்குழு உறுப்பினர் டி. சலோமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். திருரங்குளம் ஒன்றியத்தில் ஆலங்குடி, திருரங்குளம், வம்பன் நால்ரோடு உள்ளிட்ட 38 இடங்களில் கொடியேற்றப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர் மன், ஒன்றியச் செயலாளர் எல்.வடி வேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.செந்தமிழ்ச்செல்வன், பழனி வேல், நாடியம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி வடக்கு ஒன்றி யத்தில் 10 இடங்களில் கொடியேற் றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், ஒன்றியச் செயலாளர் டி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்கு தெற்கு ஒன்றியத்தில் 9 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டை ஒன்றி யத்தில் 10 இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தின வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குன்றாண்டார் கோவில் ஒன்றி யத்தில் 4 இடங்களில் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அன்னவாசல் ஒன்றியத்தில் 14 இடங்களில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் எம்.ஜோஷி, ரகுபதி உள்ளிட்டோர் பங் கேற்றனர். அறந்தாங்கி ஒன்றி யத்தில் 10 இடங்களில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் கே.தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் 3 இடங்களில் ஒன்றியச் செயலாளர் என்.பக்குருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமயம்
புதுக்கோட்டை ஒன்றியத்தில் 10 இடங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி உள்ளிட் டோர் பங்கேற்றனர். அரிமளம் ஒன்றியத்தில் 4 இடங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவு டையார்கோவில் ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலளர் நெருப்பு முருகே~; உள்ளிடோர் பங்கேற்றனர்.  திருமயம் ஒன்றியத்தில் 4 இடங்களில் ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானம்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணமேல்குடி ஒன்றி யத்தில் ஒன்றியச் செயலளர் கரு.ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலை ஒன்றி யத்தில் ஒன்றியச் செயலளர் சா.தோ.அருணோதயன் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
திருவாரூர் 
கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் கிளைகள் தோறும் செங்கொடிகள் ஏற்றப்பட்டது.  திருவாரூரில் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செங்கொடியை ஏற்றினார். தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனி வேல், எம்.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் டி.முருகையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் ஒன்றியம் வேப்பத் தாங்குடியில் கட்சியின் மூத்த தலைவர் பி.மாதவன் கொடியேற்றி னார். மாவட்டம் முழுவதும் அனைத்து இடைக்கமிட்டிகளிலும் செங்கொடி ஏற்றப்பட்டு நவம்பர் புரட்சி தினம் உற்சாகமாக கொண்டா டப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் குண்டவேளி கிராமத்தில் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகா தலைமையில் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.