tamilnadu

img

கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியின்றி தேர்வு  

பொன்னமராவதி: புதுக்கோட்டை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2001 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று முறை பா.முருகேசன் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கண்டியாநத்தம் ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ப.முருகேசன் மனைவி செல்வி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதன் மூலம் செல்வி போட்டியின்றி கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொன்னமராவதி ஒன்றியத்தில் மொத்தம் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவர் மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;