அறந்தாங்கி, மார்ச் 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி 39-ம் ஆண்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் எம்.முகம்மது பாரூக் தலைமை வகித்தார். கந்தர்வ கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பி.தமிழ்ச்செல் வன் சிறப்புரை ஆற்றினார். விழாவில் 2019-20ஆம் கல்வி யாண்டில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு, யுரேகா, டிவிஎஸ், காலிஸ் போன்ற தனி யார் நிறுவனங்கள் மூலம் நடை பெற்ற வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பை பெற்று 115, மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி வேலைவாய்ப்பு அலு வலர் குமார் உள்பட துறைத் தலை வர்கள் கலந்து கொண்டனர்.