tamilnadu

அடுத்தடுத்த 3 கடைகளில்  தீ விபத்து

 அறந்தாங்கி, ஆக.14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப் பகுதியில் கட்டுமாவடி சாலை உள்ளது. இந்த கட்டு மாவடி சாலையில் தனியார் மரக்கடை, கண்ணாடி கடை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன. இதில் கண்ணாடி கடையில் விலை உயர்ந்த கண்ணாடி கள் அதிகம் இருந்தன. மரக்கடையில் கல்யாண வீட்டு உபயோகத்திற்கு தேவையான மர பர்னிச்சர்கள் இருந்தன. ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஆயில் கேன்கள் அதிகமிருந்தன. இந்நிலையில் புதனன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், மேற்கண்ட 3 கடைகளும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். நகரின் மையப் பகுதியில் காலை நேரத்தில் நடந்த இந்த தீ விபத்து கார ணமாக அறந்தாங்கி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.