tamilnadu

மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக! அறந்தாங்கி பொதுக்கூட்டம் வலியுறுத்தல்

அறந்தாங்கி, பிப்.12- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரு ம்பப்பெற வலியுறுத்தி புதுக்கோ ட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செவ்வாயன்று வஉசி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  திமுக நகர செயலாளர் இரா. ஆனந்த் தலைமை வகித்தார். தமி ழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் செய லாளர் சுந்தரவள்ளி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொரு ளாளர் ஹாரூன் ரசீது உட்பட தோ ழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் மக்கள் விரோத  சட்டங்களை திரும்பப் பெற வலியு றுத்தியும், கேரளா, மேற்குவங்கம்,  புதுச்சேரி சட்டமன்றங்களில் குடி யுரிமை திருத்த மசோதாவை திரு ம்பப் பெற வலியுறுத்தியும் தீர்மா னம் நிறைவேற்றியதை போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.