tamilnadu

img

தனித்திறமைகள் மதிப்பெண்களைத் தாண்டிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும்... கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை:
இசை, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட தனித்திறமைகள்தான் மதிப் பெண்களைத் தாண்டிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றார்கவிஞர் நா.முத்துநிலவன்புகழ்பெற்ற ஓவியர் ராஜாவின் 13-ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஓவியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஓவியர் ராஜாவின் துணைவியார் வசந்தா, மருத்துவர் சுரேஷ் சுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கிகவிஞர் நா.முத்துநிலவன் பேசியது:

மாணவர்கள் பாடங்களில் மட்டுமல்ல. இசை, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட தனக்கு ஆர்வமுள்ள கலைகளையும் கற்றுக்கொள்வது அவசியம். மதிப்பெண்களைத் தாண்டிய வேலை வாய்ப்புக்களை இதுபோன்ற தனித்திறமைகளே உருவாக்கும். ஓவியர் ராஜாவிடம் பயின்ற 30-க்கும் மேற்பட்டோர் தற்பொழுது சிறந்த ஓவியர்களாகத் திகழ்கின்றனர். ஓவியர்ராஜாவின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு தென்னக ஓவியர்கள்முன்னேற்ற சங்கமும், புதுக்கோட்டைமாவட்ட ஓவியர் முன்னேற்ற நலச்சங்கமும் தீர்மானித்திருக்கின்றன. இதனை தமிழக அரசு நிறைவேற்றித்தர நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.

ஓவியப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. ஓவியர் ராஜா வரைந்தநூற்றுக்கும் மேற்பட்ட மூல ஓவியங்களும், போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் வரைந்த385-ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டன. முன்னதாக சித்ரகலா ரவி வரவேற்க, கணேசன் நன்றி கூறினார்.