tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, மார்ச் 3- புதுக்கோட்டை பொன்ன மராவதியில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய வற்றை திரும்ப பெற வலி யுறுத்தி நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு நகர தலைவர் ஏ.சேக் முகமது தலைமை வகித் தார். நகர செயலாளர் ஏ.முகம் மது இஸ்மாயில் வர வேற்றார். மாநில பொறுப்பா ளர்கள் காசிநாததுரை, சபி புல்லா, சலாஹூதீன், அபூ பக்கர் சித்திக் சிறப்புரை யாற்றினர்.  சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் என்.பக்ருதீன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், காங்கி ரஸ் கட்சியின் சோலை யப்பன், நகர தலைவர் பழனி யப்பன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, நகர செயலா ளர் அழகப்பன், அமமுக நகர செயலாளர் பாரதி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசு ,பிரதாப் சிங், திராவிடர் கழகத்தின் ஆசைத்தம்பி, மக்கள் பாதையின் ஞானசேகர், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மலை.தேவேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 

;