பொன்னமராவதி, டிச.21- பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் கண்டியாந்த்தம் ஊராட்சி மன்ற தலைவராக செல்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்விக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான ஒன்றிய ஆணையர் வேலு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஸ்ரீகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஆலவயல் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் அழகு, முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.