புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரின் உருவப்படம் திறப்பு விழா மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியும், சுமார் 12 அடி நீள பிரமாண்ட மாதிரி ராக்கெட் பள்ளி மாணவர்கள் சார்பில் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து ரத்ததான முகாமும் நடைபெற்றது.