tamilnadu

img

3 மாதத்திற்கு பின் கடலுக்குச் சென்றும் போதிய நண்டு, இறால் கிடைக்கவில்லை மீனவர்கள் வேதனை

அறந்தாங்கி, ஜூன் 15- புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்நிலையில்  சனிக் கிழமை மதியம் மீனவர்கள் கட லுக்குச் சென்றனர். மீன்பிடித் தடைக் காலம், கொரோனா ஊரடங்கு என 3 மாதத்திற்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  வழக்கமான நாட்களில் கிடைக் கிற இறால், நண்டு கூட தற்போது தடைக்காலத்திற்கு பிறகு கிடைக்க வில்லை. உரிய விலையும் இல்லை.  படகு ஒன்றிற்கு ரூ. 3 லட்சம் வரை செலவு செய்தும், அதற்கான உபகர ணங்கள் மற்றும் எரிபொருள் ஆகிய வற்றிகு செலவு செய்து இறால், நண்டுகள் முறையாக கிடைக்காத நிலையில் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.