30 ஆண்டுகளாக வாக்களித்து வருகிறோம். நாங்கள் சொன்ன முதல் கோரிக்கை சாலை கூட நிறைவேற்றப்படவில்லை. வாக்கு மட்டும் எதற்கு என கூறி பீகார் மக்களை வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர்.
பீகார் சட்டமன்ற வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில், ஜப் தக் ரோடு நஹின், தாவல் தக் வாட் நஹின் என்ற வாசகங்களுடன் (சாலை இல்லை, வாக்கு இல்லை) சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை புறக்கணிப்பார்கள். எட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. யாரும் வாக்களிக்க வரவில்லை, மக்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பீகார் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டங்களில் 16 மாவட்டங்களில் 78 சட்டமன்றத் தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். முதல் கட்டத்தில் 55.69 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 53.51 சதவிகிதத்தையும் பெற்றுள்ளது. பீகார் சட்டமன்றம் 243 உறுப்பினர்களை கொண்டது.