tamilnadu

img

பீகார் : ஐசிஐசிஐ வங்கியில் 8 லட்சம் கொள்ளை

ஐசிஐசிஐ வங்கியில் ரூ.8 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முஜாபர்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ரூ 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வங்கி மேலாளர் கூறியதாவது,  ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வங்கிக் கிளைக்குள் திடீரென நுழைந்தனர். அப்போது வங்கியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியில் இருந்தனர். இந்நிலையில் உள்ளே வந்த 6 பேர் கொண்ட கும்பல் சில நிமிடங்களில் துப்பாக்கியை காட்டி 8 லட்சம் ரூபாய் பணத்தையும், பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து சென்றதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில், மூவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;