tamilnadu

img

பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு - 16 பேர் படுகாயம் 

பீகாரில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை கண்டித்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
பீகார் மாநிலம் vவைசாலி மாவட்டம் தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு கும்பல் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது.  இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் அந்த கும்பலை தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு கும்பல் ஆசிட்டை வீசி அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளது. ஆசிட் வீச்சில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;