கடலூர்,மே 9- நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து சிஐடியு கடலூர் மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயா ரிக்கப்பட்டு தமிழகம் உட்பட இதர பல மாநி லங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1470 மெகாவாட் மின்சா ரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை (மே 7) மாலை 6 வது அலகில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கு பணி யாற்றிய நிரந்தர தொழிலாளர்கள் 2 பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் என 8 பேருக்கு பயங்கர தீ காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி காவேரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொதிகலனில் உயர் அழுத்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு வால்வு தானாகவே திறந்து நீராவியை வெளியேற்றி அழுத் தத்தை குறைத்து விடும். ஆனால் அன்றைய தினம் பாதுகாப்பு வால்வு செயல்படாததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க நிர்வாகத் தின் அலட்சிய போக்கே காரணம். அவ்வப்போது பராமரிப்பு பணி களை முறையாக மேற்கொள்ளாது பாது காப்பு வால்வுகளை சரிவர பராமரிக்காத தே இவ்விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், இதே அலகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போதே இத்துறையில் அனுபவமுள்ள பெல் நிறுவனத்திடம் இப்பணியை ஒப்ப டைத்து செய்திருந்தால் இவ்விபத்து நடந்தி ருக்காது. ஆனால் நிர்வாகம் இத்துறையில் அனுபவம் இல்லாத உள்ளூர் ஒப்பந்த காரர்களை வைத்து இப்பணியை செய்ததே இவ்விபத்திற்கு காரணமாக அமைந் துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் சர்புதீன் என்ற தொழிலாளி சிகிச்சை பலன ளிக்காமல் இறந்து விட்டார். இறந்த தொழிலா ளியின் குடும்பத்திற்கு சட்ட ரீதியாக கிடைக் கக்கூடிய இழப்பீட்டு தொகை மற்றும் என்எல்சி நிர்வாகம் வழங்கும் இழப்பீட்டு தொகைக்கு மேல் கூடுதலாக ரூபாய் 50 லட்சம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலையும் அளிக்க வேண்டும். இதர தொழிலாளர்களுக்கு தர மான மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு இவர் களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். விபத்திற்கான காரணங்களை முழுமை யாக கண்டறிந்து இத்துறையில் அனுபவம் உள்ள நிபுணர் களைக் கொண்டு பாது காப்பு ஏற்பாடுகளை செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருக்க வும் தொழிலாளர்கள் பயமின்றி பணியாற்று வதற்கும் உரிய நடவடிக்கைகளை என்எல்சி நிர்வாகமும், மத்திய அரசாங்கமும் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.