tamilnadu

img

பேரிடரை எதிர்கொள்ள மத்திய அரசு போதுமான உதவி செய்வதில்லை

தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் பேச்சு

சென்னை, ஆக.3- நீர்நிலைகளை மீட்டெ டுப்பதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று தலைமைச் செயலாளர் க. சண்முகம் தெரிவித்தார். சென்னையில் நடை பெற்ற பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சிகள் தொடர்பான கருத்தரங்கை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: ஒவ்வொரு பேரிடரும் ஒரு  புதிய பாடத்தைக் கற்றுத் தந்துவிட்டுச் செல்கிறது. அதன் மூலம் நமது அறிவை விரிவாக்கி, அதற்கேற்ற தயார் நிலையை ஏற்படுத் திக்கொள்ள வேண்டும்.  சுனாமி ஏற்பட்ட போது கற்ற பாடத்தை வைத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வர்தா, ஒக்கி, கஜா புயல்களின் போது,  அதிக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் காப் பாற்றப்பட்டன. இயற்கையை வெற்றி பெற மனித வர்க்கம் போரா டிக் கொண்டுதான் இருக்கி றது. ஆனால் வெற்றி பெற முடியாது; மேலாண்மைதான் செய்ய முடியும். பேரிடர் காலங்களில் தன்னார்வ லர்கள் ஒவ்வொருவரும் என் னென்ன பணியில் ஈடுபட வேண்டும்? முதலில் யாருக் குத் தகவல் தர வேண்டும்? போன்ற விவரங்களை கற்றுக்கொள்ள முடியும்.

புயல் வரக்கூடிய காலங் களுக்கு ஒரு சில மாதங்க ளுக்கு முன்பாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடலாம். அனைவரையும் தயார்படுத்த முடியும். என்ன தான் தயாராக இருந்தாலும், அது வேறு புதிய கோணத் தில் பாதிப்பை ஏற்படுத்தத் தான் செய்யும். அதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற் பட்டுள்ள பாதிப்பை அறிந்து அதற்கேற்ற தயார் நிலையை உருவாக்கிக்கொள்ள வேண் டும். பேரிடர் அனுபவங்களை  தேச எல்லை கடந்து அறிய முடிவதே சிறப்பானது. பேரிடரை எதிர்கொள்வ தில் நீண்டகாலத் திட்டம் நமக்குத் தேவை. இதில் மத் திய அரசின் உதவியை நாம்  நாடுவதில்லை. அவர்கள் வர வில்லை என்றாலும் நாமே மேலாண்மை செய்கிறோம். மத்திய அரசிடம் உதவி களைக் கேட்டாலும், அங்கி ருந்து தரும் உதவிகள் போது மான அளவில் இருப்ப தில்லை. வறட்சி என்பது மற் றொரு வகையான பேரிடர். நீர்நிலைகளை அரசு மீட்டெ டுத்து வருகிறது. எனவே, வறட்சியை எதிர்கொள்ள அது உதவும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்யகோபால் வரவேற்றார். கருத்தரங்கில் தேசிய பேரி டர் மேலாண்மை ஆணை யத்தின் உறுப்பினர் மார்வா, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.