tamilnadu

img

மாவட்ட ஆட்சியரே ஆனாலும் பெண் தானே என்ற இளக்காரம்

மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.8- மாவட்ட ஆட்சியரே ஆனாலும் பெண்தானே என்ற இளக்காரத்துடன் விமர்சனம் செய்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறையில் பணி விதியை பின்பற்றி துணைத் தாசில்தார் நிய மனம் செய்ய வேண்டுமென செப்.30 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப் படையில் வருவாய் நிர்வாக ஆணை யரும் துணைத் தாசில்தார் பணி யிடத்தை நிரப்புமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி யும் 36 துணைத் தாசில்தார் பணி யிடங்களை நியமித்தார். இதில், ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாகவும் பதவி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டு மெனவும் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டுள்ளனர். விதிகளைப் பின்பற்றித் தான் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றும் செய்ய முடியாது என  ஆட்சியர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பதவி உயர்வில் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதிய வரு வாய்த்துறை ஊழியர் ஒருவர், மாவட்ட ஆட்சியரை கடுமையாக விமர்சித்த தோடு பெண் என்ற பார்வையிலும் தரக் குறைவாக விமர்சித்து சமூக ஊட கங்களில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். ஒரு அரசு ஊழியர் தனக்கு மேல் உயர்ந்த இடத்தில் உள்ள அதிகாரி பெண் என்பதால் தரக்குறைவாக விமர் சித்ததைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் ஜெயந்தி, சங்கீதா, கௌரி, அஞ்சம்மாள், மகமாயி உள்ளிட்டோர் பேசினர்.

இதுகுறித்து மாதர் சங்க மாவட் டச் செயலாளர் டி.சலோமி கூறும்போது, எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தா லும், மாவட்ட ஆட்சியரே ஆனாலும் பெண்தானே என்ற ஆணாதிக்கத் திமிர் இதில் வெளிப்பட்டுள்ளது. பதவி  உயர்வு நியமனத்தில் தனக்கு கருத்து இருந்தால் அதை முறைப்படி கோரிக்கை வைத்துப் போராடவும், வழக்கைச் சந்திக்கவும் அவருக்கு முழு உரிமை உண்டு. அதனை விடுத்து பெண் தானே என்ற கீழான பார்வை மூலம் தரக்குறைவாக விமர்சித்த வருவாய்த் துறை ஊழியரை நிரந்தரமாக பணிநீக் கம் செய்வதோடு, நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனையும் பெற்றுத் தர வேண்டுமெனத் தெரிவித்தார்.