tamilnadu

img

திருப்பூரில் கொள்முதல் செய்த ஆடைகளுக்கு ரூ.400 கோடி பணம் தர ரிலையன்ஸ் மறுப்பு

திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடம் ரிலையன்ஸ் நிறு வனம் கொள்முதல் செய்த ரூ.400 கோடி மதிப்பிலான ஆடைகளுக்கு, தாக்குப் பிடிக்க முடியாத பல்வேறு கெடுபிடி நிபந்தனைகளை விதித்து, பணம் தர மறுப்பதாக உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரும் ஏகபோக தொழில் குழுமமான ரிலையன்ஸ் நிறு வனம், “ரிலையன்ஸ் டிரன்ட்ஸ்” என்ற அடையாளத்தில் நாடு முழுவதும் 777 சில்லரை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. இங்கு விற்பனை செய்யும் ஆடைகளை நாடு முழு வதும் பல்வேறு ஜவுளி உற்பத்தியாளர் களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இதில், திருப்பூர் பின்ன லாடை நிறுவனங்களில் அதிகஅளவில் ஆர்டர் கொடுத்து ஆடை கொள்முதல் செய்கிறது.

பொதுவாக ஒரு ஆடை உற்பத்தி நிறுவனம் ஆடை தயாரித்து ரிலை யன்ஸ் டிரன்ட்ஸ்-க்கு அனுப்பினால் உடனடியாக பணம் தருவதில்லை. 60 நாட்களுக்குப் பிறகுதான் அந்த பணம் உற்பத்தியாளருக்கு தரப்படு கிறது. இந்த நிலையில் கொரோனா நெருக்கடி காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரிலையன்ஸ் டிரன்ட்ஸ் நிறு வனம் ஆடை உற்பத்தியாளர்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் மேலும் கால தாமதம் செய்வதும், ஆரம்பத்தில் நிர்ணயித்த விலையில் தள்ளுபடி கேட்பதும் என ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இவ்வாறு ரிலையன்ஸ் டிரன்ட்ஸ் ஏறத்தாழ 400 கோடி ரூபாயைத் தரா மல் சுமார் 5 மாத காலமாக இழுத்தடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு அறி விக்கப்படுவதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதமே 120 நாட்கள் கழித்துத் தான் பணம் தர முடியும் என்று ரிலை யன்ஸ் டிரன்ட்ஸ் தெரிவித்துள்ளது. அதுதவிர சில ஆடை தயாரிப்பாளர் களிடம் தர வேண்டிய தொகையில் தள்ளுபடி கேட்பது, வேறு சில நிறு வனங்களிடம் ஒப்பந்தம் செய்த ஆர்டர் களை ரத்து செய்வது என தன்னிச்சை யாக செயல்பட்டு வருகிறது. இப்போது 150 நாட்கள் கழித்துப் பணம் தருவோம் என்று சொல்லி வருவதாகவும் உற்பத்தி யாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே கொழுத்த லாபம் பெறும் பெரிய கார்ப்பரேட் குழும மான ரிலையன்ஸ் டிரன்ட்ஸ்-க்கு ரூ.400 கோடி ஒரு பெரிய தொகையில்லை, ஆனால் இன்றைக்கு சந்தை முடங்கியிருப்பதை காரணமாகச் சொல்லி, இதிலும் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர், என பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதேசமயம் முதலை வாயில் சிக்கிக் கொண்ட மானைப் போல, மீள முடியுமா என்ற கேள்விக் குறியுடன், பல உற்பத்தியாளர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லா மல் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

ரிலைன்ஸ் நிறுவனம் பணத்தை தராமல் இருப்பது பற்றி வட இந்தி யாவில் செயல்படும் ஜவுளித் தொழில் சார்ந்த ஒரு இணையதள இதழில் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த செய்தியை அடுத்த சில மணி நேரங்களில் இணையதளத்தில் இருந்து நீக்க வைத்துவிட்டனர் என் றும் தொழில் முனைபவர் ஒருவர் தெரி வித்தார். திருப்பூரில் மட்டும் ஏறத்தாழ 40 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் நேரடியாக இதில் சிக்கியுள்ளன. இந்த நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் பின்னலாடை உபதொழில் நிறுவனங்க ளையும் கணக்கிட்டால் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட் டுள்ளன. ஊரடங்குத் தளர்த்தப்பட்டு இப்போது பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடைமுறை செலவுக்கு முதலீடு இல்லாமல் பலர் மூச்சுத் திணறி வருகின்றனர். 40 நிறுவனங்க ளுக்கு 400 கோடி ரூபாயை ரிலை யன்ஸ் நிறுவனம் விடுவித்தால் அந்த நிறுவனங்களும், சார்பு நிறுவனங் களும் இயங்குவதுடன், ஏறத்தாழ 40 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பும் உத்தரவாதமாகும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகத்திடம் கேட்டபோது, “இது பற்றி முழுவிபரம் எனக்குத் தெரியவில்லை. சிலர் இது போன்ற பிரச்சனைகளைக் கூறி னார்கள். பொதுவாக உலகம் முழுவ தும் ஏற்றுமதி, உள்நாட்டுத் தொழில் என இரண்டிலும் அனுப்பிய சரக்கு களுக்குப் பணம் பெறும் பிரச்சனை பெரியளவுக்கு இருக்கிறது. சிறு உற் பத்தியாளர்களைப் பொறுத்தவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணங்கிப் போய்தான் புத்திசாலித் தனமாகப் பணத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காமல் போய்விடும்” என்றார். ஆனால் பாதிக்கப்பட்ட உற்பத்தி யாளர்கள் வேறுவிதமாகக் கூறினர். இணையதளப் பத்திரிகையில் ரிலை யன்ஸ் டிரன்ட்ஸ் ரூ.400 கோடி தராமல் இருக்கிறது என்ற செய்தி வந்த வுடன், அவர்கள் தங்கள் “பிராண்ட்” பெயர் கெட்டுவிடக் கூடாது என இறங்கி வருகின்றனர். சிலருக்கு ஒரு பகுதி பணத்தை வழங்கியுள்ளனர். தொடர்ந்து நிர்பந்தம் செலுத்தினால் தான் அவர்களிடம் இருந்து பணத் தைப் பெற முடியும் என்றனர்.

அத்துடன், இப்போது நடக்கும் மோடியின் ஆட்சி, ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதான் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். எனவே மோடி ஆட்சிக்கு சாதகமாக செயல்படும் ஏற்றுமதியாளர் சங்கம் பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களு ககுச் சாதகமாக நியாயம் கேட்பதற்கு பதிலாக அடக்கியே வாசிக்கின்றனர், என்றும் பாதிக்கப்பட்டோர் குற்றச் சாட்டுகின்றனர்.

         (ந.நி)