tamilnadu

img

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் ரூ.1 கோடி பணம், நகைகள் பறிமுதல்

சென்னை, அக்.19- சட்டமன்ற இடைத்தேர்தல் நடை பெறுகின்ற நாங்குநேரி, விக்கிர வாண்டி தொகுதிகளில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பணம், நகை, மதுபானங்கள் இதுவரை பறி முதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இடைத் தேர் தலை சுமூகமாக நடத்த மாவட்ட ஆட்சி யர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர் தல் பார்வையாளர்கள் இன்று முதல் (சனிக்கிழமை) பணிக்கு அமர்த்தப் படவுள்ளனர்.

இரு தொகுதிகளிலும் 56 லட்சம் ரூபாய் ரொக்கம், 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான வெள்ளி பரிசு பொருட்கள், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாங்குநேரியில் 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகா ரத்தில் திமுக எம்எல்ஏ சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கை இந்திய தேர் தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உப கரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்கு நாளை(ஞாயிறு) அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரி வித்தார்.