tamilnadu

img

பெரியகோவில் அருகே போர் மூலம் தண்ணீர் எடுக்க தடை கோரும் வழக்கு

தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் பெரியகோவில் அருகே ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க தடைவிதிக்க வேண்டும் என  வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் நீதிமன்ற த்தில் மனுத்தாக்கல் செய்தார், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜூலை 23-ம் தேதி இந்திய தொல்லியல் துறை, மாநகராட்சி ஆணையர், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் ஆகிய மூவரும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெரியகோவில் அருகே ராஜராஜசோழன் சிலை அமைக்கப் பட்டுள்ள இடத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் பூங்காவில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்து வருவதால், அதற்கு தண்ணீர் பாய்ச்ச கடந்த வாரம் புதிதாக 500 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு  அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த ஆழ்துளை கிணறு அமைத் தால் பெரியகோவிலின் கட்டுமான த்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி, இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வர லாற்று ஆய்வாளர்கள் மற்றும் பெரிய கோவில் பாதுகாப்பு குழுவினர் வலி யுறுத்தினர்.

இந்நிலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலை வரும், வழக்கறிஞருமான வெ.ஜீவக் குமார், தஞ்சாவூர் மாவட்ட உரிமை யியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை மனுதாக்கல் செய்தார். அதில், ‘உலக மரபுச்சின்னமும், பாரம்பரியமும் என்ற 1958-ம் ஆண்டு தொல்லியல்த்துறை சட்டத்தின்படி, மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே எவ்வித கட்டு மானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. மேலும் கோவிலின் அருகே 100 மீட்டருக்குள் பூமியில் 500 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரை உறிஞ்சினால், பூமியில் ஆற்று மணலை பெரும்பான்மையாக கொண்டு கட்டப்பட்டுள்ள, தஞ்சாவூர் பெரியகோவிலின் கோபுரத்துக்கும், பல்வேறு கட்டிடங்களின் கட்டுமானத்துக்கும் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டும் இந்த பணியை முழுவதுமாக தடுத்து நிறுத்தி தடை விதிக்கவும், பூங்காவுக்கு மாற்று வழியில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா கிறிஸ்டி, இது தொடர்பாக ஜூலை 23-ம் தேதி, இந்திய தொல்லியல் துறை இயக்குநர், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டார்.