tamilnadu

img

பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றார்...

பாட்னா:
பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பீகார் ஆளுநர் மாளிகையில்திங்களன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. நிதிஷ் குமாருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பீகார் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்றுள்ளார். பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.பதவியேற்பு விழாவில், மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.