சென்னை, ஜன. 23- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து வீரப்போர் புரிந்த வர் சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஆங்கி லேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி யவர். அவரது 124 வது பிறந்தநாள் விழா ஜன.23 அன்று கொண்டாடப்ப ட்டது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.