tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே பேச்சுவார்த்தை: மருத்துவர்கள் கோரிக்கை

சென்னை, நவ.13- உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் பாக ஏற்கனவே தெரிவித்திருந்த படி அரசு மருத்துவர்களை, தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தினர், சமீபத்தில் 4 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தாங்கள் நடத்திய போராட்  டத்தை, முதலமைச்சர் மற்றும் சுகா தாரத்துறை அமைச்சர் ஆகியோர் கேட்டுக் கொண்டதை அடுத்து திரும்பப் பெற்றதாகக் கூறினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அரசு சார்பில் தெரி விக்கப்பட்டதாகவும், ஆனால் 2  வாரங்களை கடந்தும் தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு அழைக் காதது ஏமாற்றமளிப்பதாகவும் தெரி வித்தனர்.