சென்னை, மே 30- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்த தாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதி நிதியான பிரதீப் கவுர் தெரிவித்து ளார். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் சென்னை தலைமை செய லகத்தில் சனிக்கிழமை (மே 30) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத் துவ நிபுணர் குழுவினர் கூறியதாவது:-
கொரோனா ஒரு புதிய வைரஸ் என்பதால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அரு கில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. கொரோனா பரிசோதனை எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசத்தை கட்டா யமாக அணிய வேண்டும். மக்கள் அறி குறி தென்பட்ட தொடக்க நிலையி லேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்பு வதை தவிர்க்க வேண்டும்
சென்னை, செங்கல்பட்டு, திரு வள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊர டங்கை நீட்டிப்பது நல்லது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊர டங்கு தேவையில்லை. சென்னை யில் பொது போக்குவரத்துக்கு பஸ், ரெயிலை இயக்கக் கூடாது. வழி பாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது. சென்னையில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை கொரோனாவில் இருந்து வய தானவர்களை குடும்ப உறுப்பி னர்கள் பாதுகாத்து கொள்ள வேண் டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
13 மாவட்டங்களில் 5வது கட்ட ஊரடங்கு
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 4வது கட்ட ஊராடங்கும் ஞாயிறன்று (மே 31) முடிவடைய உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினார். நோய்த்தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் இரு வாரங் களுக்கு 5வது கட்ட ஊரடங்கை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய் துள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயி றன்று வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ரயில் சேவை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ரயில் சேவையை படிப்படியாக தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக திங்க ளன்று (ஜூன் 1) நான்கு வழித்தடங்க ளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வுள்ளன. அதேநேரத்தில்இந்த ரயில் களில் பயணம் செய்ய கட்டாயம் முகக்கசவம் அணியவேண்டும்,. நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் உடல் உபாதை உள்ளவர்கள், பல் வேறு நோய்களால் அவதிப்படு வோர், வயதானவர்கள், கர்ப்பி ணிப்பெண்கள், 10 வயதுகுட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள் ளது. காரணம் ஏற்கனவே விடப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்தவர்களில் இதுபோன்ற நபர்களுக்கு எளிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை அது சுட்டிகாட்டியுள்ளது.