சென்னை, ஆக. 31- முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.90-க்கு விலை உயர்ந்துள் ளது. உருளைக்கிழங்கு 20 ரூபாயிலிருந்து ரூ.30-க்கும், முள்ளங்கி, பீட்ரூட் ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது. சவ்சவ் கிலோ ரூ.50, பாகற்காய் ரூ.60, வாழைத் தண்டு ரூ.50-க்கும், விற்கப் படுகிறது.வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கு விலை உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.தக்காளி மட்டும் விலை குறைந்துள்ளது. நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.20க்கும் நவீன தக்காளி ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
ஆப்பிள் (உள்நாடு) கிலோ ரூ.120, ராயல் கலா ஆப்பிள் ரூ.320, வாஷிங்டன் ஆப்பிள் ரூ.250, சாத்துக்குடி ரூ.60, மாதுளம் ரூ.120, பெரிய மாதுளம் பழம் கிலோ ரூ.180, பூவன் வாழைப்பழம் ரூ.50க்கு விற்பனையாகிறது. கொய்யாப்பழம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.80க்கு உயர்ந்துள்ளது. பேரிக்காய் ரூ.100, வெளிநாட்டுப் பேரிக் காய் ரூ.280க்கு விற்கப் படுகிறது.மல்லிகைப்பூ 300 கிராம் 150 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. வீதி களில் ஒரு முழம் பூ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். சாமந்தி, ரோஸ் கிலோ ரூ.40ல் இருந்து ரூ.120-க்கு விலை உயர்ந்து விட்டது. கனகாம்பரம், முல்லை 300 கிராம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், விசேஷ தினங்கள் முடிந்து செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு விலை குறையும் என்று தெரிவித்தனர்.