tamilnadu

img

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்க!

முதல்வருக்கு பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் கடிதம்

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி,செயலாளர் ஜெ.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழ் நாடு கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் 24 தேதி ஊரடங்கு தொடங்கியது முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள் ளன. அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர், விடுதி மாணவர், குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளின் மாணவர் அனைவரும்  கற்றல் இழந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அத்துடன், வயிறார சாப்பிடுகின்ற அந்த ஆதாரத் தேவை, ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை, அதை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளி, விடுதி மாணவர் கடந்த இரண்டரை மாதங்களாக அரைப் பட்டினியில் வெதும்பிக் கொண்டிருக்கி றார்கள். இன்னும் எத்தனை மாதங்கள் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல இயலாது.

அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் சமுதாயத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவரது பெற்றோர் தினக் கூலிக்கு உழைப்பவர்கள். கொரோனா-ஊரடங்கினால் இவர்கள் அனைவரும் வேலை இழந்து, அனைத்து வாழ்வாதாரங்களும் இழந்து, கொடிய வறுமை யில் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.பள்ளிகள் மூடப் பட்டு, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிறார உணவு அளிப்பது அவர்களுக்கு இயலாததாகி இருக்கிறது.  மதியம் கொடுக்கப்படும் சத்துணவு ஒன்று தான் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. ஆதி திராவிடர், பழங்குடியினரின் உண்டு உறைவிடப் பள்ளி களிலோ ஆண்டு முழுதும் கிடைக்கும் சத்துணவுதான் இக்குழந்தைகளின் வாழ்வுக் கும், வளர்ச்சிக்கும் ஆதாரம். அது மறுக்கப் பட்டதென்றால், தமிழ் நாட்டின் லட்சோப லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து இன்மை யால் கடும் பாதிப்புக்கு உள்ளாவர். மீட்கவியலா இழப்பாக மாறும். ஊட்டச் சத்து குறைபாடு உடைய ஒரு தலைமுறை உருவாகும்.  

கோவிட் 19 தாக்குதலால் அசாதாரண சூழல் தொடங்கிய பொழுதே மார்ச் 18 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதி மன்றத்தின் அமர்வு தானாக முன்வந்து பள்ளி கள் மற்றும் அங்கன்வாடிகளில் உள்ள குழந் தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவது பற்றி மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டது.  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால்  மார்ச் 20 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சத்தின் இணைச் செயலாளர் மாநில அரசுகளின் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் கல்வித்துறைச் செயலாளர் உள்ளிட்டவர்களு க்கு பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பி னார். 

இச்சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், குழந்தை தொழி லாளர் திட்டத்தில் நடத்தப்படும் சிறப்புப் பயிற்சி மையங்கள் ஆகியனவற்றில் பள்ளி மதிய உண வுத் திட்டத்தின்படி குழந்தைகளுக்கு வழங்கப் படும் மதிய உணவை, கோவிட் 19 அசாதாரண சூழலால் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக் கப்பட்ட காலத்திலும் வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோவிட் 19 நோய்த்தொற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச் சத்தும் நோய் எதிர்ப்புத் திறனும் அவசியமானது என்ப தையும் பள்ளி வேலை நாட்களில் உணவு தானி யம் இல்லாமை, சமையலர் வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் சூடான சமைத்த மதிய உணவு வழங்கவில்லை என்றால் ஒரு குழந்தைக்கென்று நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி,பருப்பு, எண்ணெய் மற்றும் சமையல் செலவு உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு மானி யத்தை (Food Security Allowance) மாநில அரசுகள் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று மதிய உணவு திட்ட விதிகளில் (MDM Rules 2015) கூறப்பட்டுள்ளதும் இவ்வறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டது.  

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் மார்ச் 28 அன்று மாநிலக் கல்வி அமைச்சர்களுடன் காணொலிக் கூட்டம் நடத்தியுள்ளார். கோவிட் 19 நோய்த்தொற்று பரவும் சூழலில் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பெறவும்  நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறவும் சத்துணவு அவசியம் என்பதால் மதிய உணவு அல்லது உணவுப் பாதுகாப்பு மானியம் (உணவு தானியங்கள் மற்றும் சமைக்கும் செலவு) கோவிட் 19 விடுமுறைக் காலத்தில் வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாநில கல்வி அமைச்சர்களிடம்  வலியுறுத்தியுள்ளார்.  மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் மார்ச் 29 இல் அனுப்பிய இரண்டாவது சுற்றறிக்கையில், செப்டம்பர் 2020 வரையிலான காலத்திற்கு  மத்திய அரசு மாநிலங்களுக்கு பள்ளி மதிய உணவிற்கான 12.24 மெட்ரிக் டன் உணவு தானி யம் வழங்கியுள்ளதையும்  ஏப்ரல் 1, 2020 முதல் ஒரு குழந்தைக்கான சமைக்கும் செலவு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு 4.48 ரூபாயிலிருந்து 4.97 ஆகவும் உயர் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 6.71 ரூபாயிலிருந்து 7.45 ஆகவும் உயர்த்தியுள்ளதையும் இதற்கான இடைக்கால நிதி ஒதுக்கீடு 2566.93 கோடி வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். 

2018 – 2019 புள்ளி விவரப்படி தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்திவரும்  பள்ளிக் குழந்தை கள் சத்துணவுத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மொத்தக் குழந்தைகளில் 87 விழுக் காடு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அதாவது மொத்தக் குழந்தைகள் 50,10,783 பேரில் 43,62,894 பேர் சத்துணவு உண்போராக உள்ளனர். இத்துடன், ஒன்பது, பத்து வகுப்புக் குழந்தைகளையும் சேர்த்தால், ஏறக்குறைய 65 லட்சம் குழந்தைகள் பேரிழப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் மனித வள அமைச்சகமும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும்படி மாநில அரசுகளுக்கு மார்ச் மாதமே அறிவு றுத்திய நிலையிலும் தமிழ்நாடு அரசு இதற்கான ஏற்பாடுகளை மூன்று மாத காலமாக செய்யா மல் இருப்பது ஏழைக் குழந்தைகளை வயிற்றில டிக்கும் செயலாகும். பள்ளிகளைத் திறப்பதும் கால வரையறை இன்றி தள்ளிப் போகும் சூழலில் குழந்தைகள் மேலும் பாதிப்புக்கு ஆளாவர்.  

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடு முறைக் காலத்தில் பாடநூல்கள் வழங்கவும், இணைய வழி வகுப்புகள் நடத்தவும் தமிழ்நாடு அரசு போதுமான அக்கறை காட்டி வரு கிறது. அங்கன்வாடிக் குழந்தைகளுக்கும் நேரடி யாக உணவுக்கான பொருள்களை வழங்க உரிய ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது, ஆனால் சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் பசியாற்றவும் ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்புத் திறனும் வளரவும் உரிய அக்கறை காட்டாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.   இது குறித்த சிந்தனையே தமிழக அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண நாட்களில் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொ டுக்கப்படும் அனைத்தும் கொரோனா காலத்தி லும் அளிக்கப்பட வேண்டும். இதில் சத்துணவு டன், வைட்டமின் மாத்திரைகள், குடற்புழு நீக்க மாத்திரைகள், சானிடரி நாப்கின் ஆகியவை யும் அடங்கும். 

பள்ளிகள் மூடி இருக்கும் நேரத்தில் உணவு சமைத்து வழங்குதல் கடினமாக இருக்க லாம். சாப்பிட வரும் குழந்தைகளிடையே  தொற்று பரவாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படி என்றால், அரிசி, பருப்பு, எண்ணெய், மற்ற அனைத்தும் (dry rations), காய்கறி, முட்டைக்குத் தேவையான பணமும் பெற்றோ ரிடம் கொடுக்கப்பட வேண்டும். மத்திய அர சின் அறிவுறுத்தலையும், நிதி ஒதுக்கீட்டையும் ஒட்டி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு இத்த கைய முறையைப் பின்பற்றி, வாரம் தோறும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாட்டை ஏற்கெனவே செய்திருக்கும் தமிழக அரசு, மற்ற குழந்தைகளுக்கு அதே ஏற்பாட்டை செய்ய எவ்வாறு தவறியது என்பது புரியவில்லை. 

மதிய உணவிற்கும், விடுதிக் குழந்தைக ளுக்கான உணவிற்கும் 2020-21 ஆம் ஆண்டுக் கான தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிதி ஏன் செலவிடப்படவில்லை என்ற கேள்வி எழு கிறது. 2019-20 கல்வி ஆண்டில், ஊரடங்கிற்கா கப் பள்ளிகள் மூடப்பட்ட மார்ச் 24 லிருந்து, ஏப்ரல் இறுதி வரை அந்த கல்வி ஆண்டின் சத்துணவு/விடுதி உணவுக்கான நிதி செலவி டப்படவில்லை. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்கி உணவு வழங்கல் நடைபெறவில்லை. 

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசிடம் கீழ்காணும் கோரிக்கைகளை வைக்கிறது:

இது வரை மதிய சத்துணவு பெற்றுக் கொண்டிருந்த அனைத்து மாணவருக்கும் அதற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களும், (dry rations) காய்கறி, முட்டைக் கான பணமும் பள்ளிகள் திறக்கும் வரை அளிக்கப்பட வேண்டும். அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு தற்போது அளிக்கப்படும் முறையைப் பின்பற்றியே அதை செய்யலாம். 

 அவற்றுடன், இதுவரை அளித்து வந்த வைட்டமின் மாத்திரை, குடற்புழு நீக்க மாத்திரை, சானிடரி நாப்கின் ஆகியவையும் வழங்கப்பட வேண்டும்.

 விடுதியில் தங்கிப் படித்து வந்த மாண வர்களுக்கு, ஒரு மாணவருக்கு அளிக்கப்படும் உணவு பொருட்களாகவும், மற்றவை பணமாக வும் அளிக்கப்பட வேண்டும். 

தமிழகத்தின் இந்த மகத்தான வர லாற்றிலிருந்து இன்றைய தமிழக அரசு பிறழ்ந்துவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இலக் காகக் கூடாது என்று வேண்டுகிறோம்.