சென்னை:
பிளஸ்-1,பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்அக்டோபர் 14ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.