tamilnadu

img

குணமடைந்த பத்திரிகையாளர்கள்

சென்னை, ஏப்.27- உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் இரு இளம்  பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சென்னை  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்ப டுத்தப்பட்ட தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் குணமடைந்த ஏழு நபர்க ளில் பத்திரிகையாளர்களில் முதல் தொற்று உறுதி  செய்யப்பட்ட நபரும் குணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 19 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணம டைந்ததால் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.