tamilnadu

img

பாஜக அரசு மொழிப் பாகுபாடு பார்ப்பதில்லையாம் : அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை,ஆக.18-  மத்திய பாஜக அரசு தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் தாய்மொழியை புறக்கணித்து இந்தி மொழியை திணித்து வருகிறது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளன. தமிழகத்திலும் பாஜகவின் இந்திமொழி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பும் போராட்டங்களும் நடைபெற்று வரு கின்றன. ஆனால் தமிழக அதிமுக அரசு,  பாஜக அரசின் நடவடிக்கையை கண்டிக்கா மல், ஆதரித்து வருகின்றது.   இந்நிலையில் மத்திய அரசு மொழிப் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூட்டுற வுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை உலகத் தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்ட றையின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழாவில், மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்கிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் புறநானூற்று வரி களை மேற்கோள் காட்டியதை சுட்டிக் காட்டிய அமைச்சர், மத்திய அரசு மொழிப் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறினார். அமைச்சரின் பேச்சால் பலருக்கு சிரிப்பு தான் வந்தது.