tamilnadu

img

பண்பாட்டை சீர்குலைக்கும் பாஜக அரசு

வாலிபர் சங்க செயலாளர் எஸ்.பாலா குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 21- தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு இலைஞர் அமைப்புகளின் சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து பேரணியாக கோட்டை நோக்கி சென்றனர்.  அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் வாலிபர் சங்க மாநிலத்தலைவர் ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் கார்த்தீஷ்குமார், செயலாளர்கள் சரவண தமிழன், ஆறுமுகம், மஞ்சுளா, சீராளன் (புரட்சி கர இளைஞர் முன்னணி), பாண்டி யன் (திக இளைஞரணி) உள்ளிட்ட  100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து எஸ்.பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நாட்டு மக்களை பிளவுபடுத்துகிறது மத்திய மோடி அரசு. இந்த சட்டம் நிறைவேற முக்கிய காரணம் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுதான். இந்திய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைத்துள்ளன. தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சிஏஏ திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் அனைவரிடத்திலும் சமமான அன்பு செலுத்த வேண்டும் அதுதான் உண்மையான தேசபக்தி என்று நாட்டின் விடுதலைக்காக மகத்தான போராட்டத்தை நடத்திய மகாத்மா காந்தி கூறினார். அந்த தேச பக்திக்கு மாறாக ஒற்றுமையாக வாழும் மக்களை பிளவுபடுத்துகிற பாசிச ஆட்சி நடைபெறுகிறது. சட்டரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மோடி ஆட்சியில் இதற்கெதிராக போராடிய 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அடக்குமுறை மூலம் போராட்டங்களை ஒடுக்கி விடலாம் என அரசு கருதுகிறது.  ஆனால் போராட்டங்கள் மூலம் ஆட்சி யாளர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளை களை அடக்கி வெற்றிபெற்ற ரஞ்சித் என்ற இளைஞன் கூறுகையில், என்  வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது முகமது என்ற எனது நண்பன்தான் என்று கூறினான். இதுதான் இந்தியா வின் பண்பாடு. இந்த பண்பாட்டை சீர்குலைக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது என்றார்.