சென்னை, செப்.15- ஆவின் பால் விலை உயர்த்தப் பட்டதை அடுத்து, தயிர், நெய், பால் கோவா போன்ற பால் உப பொருட்க ளுக்கான விலையையும் ஆவின் நிறு வனம் உயர்த்தியுள்ளது. பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதி கரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயிலிருந்து 495 ஆகவும், ஒரு கிலோ பால் பவுடர் ரூ. 270 லிருந்து 320 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பன்னீர் ரூ.450 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. 230 ரூபாய்க்கு விற்பனையான அரை கிலோ வெண்ணெய் ரூ. 10 உயர்த்தப்பட்டு ள்ளது.
ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.520 ரூபாயாக உயர்ந்துள்ளது. டிலைட் பால் அரை லிட்டர் விலை 26 ரூபாயிலி ருந்து 30 ரூபாயாகவும், நறுமண பாலின் விலை அரை லிட்டருக்கு 22 ரூபாயிலி ருந்து 25 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு ள்ளது. அரை லிட்டர் தயிர் விலையை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. பால் உப பொருட்களுக்கான விலை உயர்வானது செப்.19 முதல் அமலுக்கு வருகி