tamilnadu

img

சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத‌ மாணவி

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதிக்கு உள்பட்ட தி.பரங்கினி என்ற கிராமத்தில் வசித்துவரும் விவசாய கூலி தொழிலாளி முனியாண்டி என்பவரது மகள் தனலட்சுமி. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இந்தப்பெண் 12ஆம் வகுப்பை நிறைவுசெய்து, தனது மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை.

"எனது மூத்த சகோதரிகள் இரண்டு பெரும் 12ஆம் வகுப்பு முடித்தபோது, அவர்களது மேற்படிப்பிற்காகச் சாதி சான்றிதழ் பெற முடியவில்லை. இதனால், படிப்பைத் தொடர முடியாமல், அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதேபோன்று எனக்கும் சான்றிதழ் வழங்க மறுத்தால், எனது சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது," என்கிறார் தனலட்சுமி