tamilnadu

img

6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கம் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை,அக்.9- ஆயுத பூசை மற்றும் தொடர்  விடுமுறையையொட்டி தமிழ கத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்து களில், அக்டோபர் 8ஆம் தேதி  நள்ளிரவு 12 மணி நிலவரப்படி  ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 450  பயணிகள் சென்னை திரும்பி யுள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆயுத பூசையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்க ளுக்கு சென்று வர வசதியாக அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதி களில் சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அக்டோபர் 4 மற்றும் 5 ஆம்  தேதிகளில் வழக்கமாக இயக்கப்  படும் 2 ஆயிரத்து 225 பேருந்து கள் வீதம், ஆயிரத்து 695 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 6  ஆயிரத்து 145 சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டது. இந்நிலையில், ஆயுத பூசை கொண்டாட்டங்கள் முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பியுள்ள பயணி களின் எண்ணிக்கை குறித்து போக்குவரத்துத்துறை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 289 பேருந்துகளில், 1 லட்சத்து 49 ஆயிரத்து 450பயணிகள் சென்னை திரும்பியுள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;