பாட்னா:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து, பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில்,மசூதி ஒன்றை அடித்து தாக்கி சூறையாடியுள்ளனர்.பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, பீகாரின் பல பகுதிகளில் பாஜக-வினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் இறங்கினர். இதன் ஒருபகுதியாக கிழக்கு சம்பாரனில் உள்ள ஜாமுவா கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் திரண்டுள்ளனர். இவர்கள் தங்கள் தொகுதியில்தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக-வின் பவன்குமார் ஜெய்ஸ்வால் வெற்றியை கொண்டாடுகிறோம் என்று கூறி, ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தின் நிறைவில்தான், ஜாமுவா கிராமத்திலிருந்த மசூதியைத் தாக்கி சூறையாடியுள்ளனர். மசூதி மீதுகற்களை வீசியதில், அங்கு தொழுகையில் இருந்த 5 பேர் காயம் அடைந் துள்ளனர்.
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கமிட்டபடி மசூதியை தாக்கிய பாஜகவினர், மசூதியின் இரண்டு வாயில்கள், மசூதியின் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றைச் சூறையாடினர் என்று மசூதியின் பொறுப்பாளர் மஹர் ஆலம் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த சம்பவம் தொடர் பாக, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.