tamilnadu

img

ஐபிஎஸ் அதிகாரி குப்தேஸ்வர் ஜேடியுவில் இணைந்தார்... சுஷாந்த் மரண வழக்கில் ஆர்வம் காட்டியவர்

பாட்னா:
பீகார் மாநில காவல்துறைத்தலைவர் (டிஜிபி) பதவியிலிருந்து கடந்த வாரம் விருப்ப ஓய்வுபெற்ற குப்தேஸ்வர் பாண்டே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்மரணம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டவர்தான்,

பீகார் மாநில டிஜிபி-யாக இருந்த குப்தேஷ்வர் பாண்டே(59). அந்த வழக்கில், மகாராஷ்டிர மாநிலசிவசேனா- என்சிபி- காங்கிரஸ்கூட்டணி அரசை பகிரங்கமாகவே விமர்சித்தார். இதன்மூலம் பீகாரிகளின் உரிமையைப் பாது
காப்பதில் ஐக்கிய ஜனதாளம் - பாஜக கூட்டணி அரசு உறுதியுடன் போராடுவது போன்ற தோற் றத்தை ஏற்படுத்த முயன்றார். அப்போதே இவர், டிஜிபி-யா,அரசியல்வாதியா? என்று பலரும் விமர்சனங்களை எழுப்பினர்.இதனிடையே, 2021-ம்ஆண்டு பிப்ரவரி வரை பணிக் காலம் இருக்கும் பாண்டே, திடீரென கடந்த வாரம் ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்குவிண்ணப்பித்தார். 3 மாத அவகாசம் கூட எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அவரது விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

அப்போதே, குப்தேஸ்வர் பாண்டே அரசியல் கட்சியில் சேர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், கட்சியில் சேருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புவரை கூட குப்தேஸ்வர் பாண்டே அதனைமறுத்தார். ஆனால், ஞாயிறன்றுபீகார் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்து, ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்துள் ளார்.கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் பக் ஸார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, குப்தா விருப்ப ஓய்வு கோரினார். ஆனால், பாஜக அதனை ஏற்கவில்லை.தற்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்துள்ள குப்தேஸ்வர் பாண்டே, வால்மீகிநகர் மக்களவைத் தொகுதிஇடைத்தேர்தலில் போட்டியிட
லாம் என்று கூறப்படுகிறது.