tamilnadu

img

பீகாரில் வெள்ளம் 14 மாவட்டங்கள் மூழ்கின... 49 லட்சம் மக்கள் தவிப்பு

பாட்னா:
பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும்  நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிடர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும்நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.  கொரோனா சூழல் காரணமாக வெறும் 26,732 பேர்கள் மட்டுமே 19 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சமூக சமையற்கூடம் மூலமாக உணவு சமைத்து விநியோகித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.