tamilnadu

img

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி வெளிவரும் பாசிச முகங்கள்- நாகைமாலி

வரலாற்றை மதவெறிக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர் கள். இந்து மன்னர்கள் அனைவரும் அகிம்சா மூர்த்திகளாகத் திகழ்ந்தது போலவும், மத நல்லிணத்திற்கா கப் பல சீர்திருத்தச் செயற்பாடுகளை மேற்கொண்ட அக்பர் முதல் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தான் வரை, முஸ்லிம் மன்னர்கள் எல்லாம்  கொடுமைக் காரர்கள் போலவும் சித்தரிக்கத் துடிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த மதவெறிக் கொள்கைப் படித்தான், தற்போது காஷ்மீரைச் சிதைத்ததற்கும், ஒரே நாடு, ஒரே மொழி- இந்தி என அண்மையில் அமித்ஷா பேசிய பேச்சுக்கும் கார ணம் ஆகும். இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் கூடாது என்றும் அவர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருக்கிறார். 

அக்பரும் மத நல்லிணக்கமும்
அக்பரின் வரலாற்றைப் புரட்டினால் மத நல்லிணக்கத்தி ற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். பிறப்பால் முஸ்லிமான அக்பர், இந்து ராஜபுத்திர இளவரசியை மணந்தார். அந்த இந்து மனைவிக்குப் பிறந்த சலீம், பின்னர், ஜஹாகீர் என்ற பெயருடன் பட்டத்து இளவரசரா னார்.அக்பருக்குப் பின்னர் ஆண்ட மொகலாய மன்னர்க ளை முஸ்லிம் பரம்பரை என்றே கூறமுடியாது. முஸ்லிம்-இந்துக் கலப்புப் பரம்பரைதான் ஆட்சியில் இருந்துள்ளது. ஜஹாங்கீர் தாய் வழியில் ஒரு இந்துதான். அக்பரின் அரசவையில் அனைத்து மதத் தலைவர்க ளும் இருந்தனர். முஸ்லிம் குருமார்கள், இந்து வைதீகவாதி கள், கிறிஸ்தவ ஜெஸ்யூட் பாதிரியார்கள், சமண மதச்சாரி யார்கள், சீக்கிய குருமார்கள் எனப் பலர் இருந்தனர்.  அக்பரைப் பற்றி காந்தி இப்படிக் கூறுகிறார்: “அக்பர் சிறந்த முன்யோசனை உள்ளவர். சகிப்புணர்வு மிக்கவர். இந்தியாவை ஆட்சி செய்வதில், மத நல்லிணக்கத்தைக் கொண்டிருந்தார்.”  காந்தி மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஏற்பட்ட கடுங்கோ பத்திற்கு இதுவும் ஒரு காரணம். ஆக்ராவுக்கு அருகே அக்பர் உருவாக்கிய ‘பதேபூர் சிக்ரி’ என்ற நகரில் உள்ள மசூதியில் இயேசுநாதர் கூறிய ஒரு வாசகத்தைப் பொறித்து வைத்த வர் அக்பர். அந்த வாசகம் இதுதான்: “உலகம் என்பது ஒரு பாலம், அதன்மீது ஏறிக் கடந்து செல்லுங்கள்; ஆனால், அதன் மீது வீடு கட்டாதீர்கள்…” கணவர் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் வெறுத்தார். சில நேரங்களில், மனைவி தீயில் எரிவதை வேடிக்கை பார்க்கச் சென்றவர் தான் அக்பர். இதன் கொடுமையை உணர்ந்த அக்பர், அதைக் காண மனம் பொறுக்காமல், அங்கு போவதையே நிறுத்திக் கொண்டார். இது, இந்து புரோகிதர்கள் அக்பர் மீது கோபம் கொள்ளச் செய்தது. அரசர் என்ற முறையில் மட்டுமல்ல, மனிதர் என்ற வகையிலும் மதவேறுபாடு கடந்து, ஏராளமான நண்பர்க ளைக் கொண்டிருந்தவர் அக்பர். இந்து மதத்தைச் சேர்ந்த மகாகவி பீர்பாலுக்கும் அக்பருக்கும் உள்ள நட்பு மகத்தா னது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. தங்களுக்கு இசைந்து வந்தால், அவர்க ளை மகாத்மா எனப் புகழ்வதும், தங்கள் கொள்கைகளுக்கு இடையூறு என்றால் சுட்டுத் தள்ளவும் தயங்காதவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
பாபர் மசூதி இடிப்பு…
மக்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். மத வெறியர் கள்தான் மக்களைத் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காகப் பிரிக்கிறார்கள். இன்றைக்கும் தமிழகத்தில் பழனி முருக னுக்கு மொட்டை போட்டுவிட்டு, நாகூர் தர்காவில் பாத்திகா ஓதி, வேளாங்கண்ணி மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வழி படும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த ஒற்றுமை மிக்க- சமூக வாழ்வை நீடிக்கவிடக் கூடாது என்று மத வெறி யர்கள் கங்கணம் கட்டித் திரிகிறார்கள். எங்கும் நிறைந்தவர் ராமர் எனச் சொல்லிக் கொண்டே, ‘இந்த இடத்தில்தான்’ ராமர் பிறந்தார் என்று, மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கூட்டம். 450 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்ததன் மூலம், முஸ்லிம்கள் வடித்த ரத்தக் கண்ணீரைக் கொண்டு ராமர் கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடத்தியவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்- பாஜக பேர்வழிகள்.

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழியா?
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரதானக் கொள்கை என்ன வெனில், “இந்தியாவில் இந்து தேசத்தை” உருவாக்க வேண்டும் என்பதாகும். இவர்கள் இந்திய நாட்டிற்குச் சுதந்தி ரம் கிடைத்ததை விரும்பவில்லை. இந்தியாவில் “இந்து தேசம்” உருவாகும்வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள வேண்டும் என்பதே நோக்கம். அத்தகைய கொடிய சித்தாந்தத்திற்குச் சொந்தக்கா ரர்தான் பிரதமர் மோடி. ஆர்.எஸ்.எஸ்.என்னும் பாதி ராணுவப் பணி அமைப்பே, பாஜகவை வழிநடத்துகிறது. அதுதான் இந்தியாவை ஆட்சி புரிகிறது. ‘இந்துக்கள் நலன்’ என்றும் ‘இந்து தர்மம்’ என்றும் பேசும் இவர்கள், ஏழை இந்துக்க ளுக்கோ ஏழை விவசாயிகளுக்கோ, தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கோ எப்போதும் ஏதும் பேசியதே இல்லை. இவர்கள் கூறுகிற இந்துக்கள் நிலபிரபுக்களும் உயர் சாதியினரும்தான். இவர்கள் கூறுகிற ‘இந்து தர்மம்’ மேல்தட்டு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும்வர்ணாஸ்ரம தர்மமே. அத னால்தான், கிராமப்புற ஏழைகளும் தலித்துகளும் முன் னேற்றம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கி றார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை உண்டு என்றால், அது ‘மதச்சார்பின்மை’ என்பதாகும். இந்த வார்த்தையை அகராதியிலிருந்து எடுத்துவிடவேண்டும் எனத் துடிக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் இந்த நாட்டை ஒற்றை மத நாடாக்க விரும்புகிறார்கள். இதனால்தான், ‘மதச் சார்பின்மை’ என்பது இவர்களுக்குக் கசக்கிறது. பி.ஜே.பி.யின் கொள்கை ‘ஏக இந்தியா’ என்பதாகும். இதனால்தான் மொழிவாரி மாநிலங்களே இருக்கக் கூடாது என்கின்றனர். பெரிய மாநிலங்களை உடைத்துச் சிறு சிறு மாநிலங்களாக்கவேண்டும் எனக் கூறுகின்றனர். இந்தித் திணிப்பு; சமஸ்கிருதமே இந்தியத் துணைக் கண்டத்தின் மிக உன்னதமான மொழி என்கின்றனர். ‘பூகோள ரீதியான தேசியம்’என்னும் இயல்பான கோட் பாட்டை பாஜகவினர் நிராகரிக்கிறார்கள். அதற்கு மாற்றாக, ‘கலாச்சார தேசியம்’ என்கிறார்கள். கலாச்சார தேசியத்திற்கு இவர்கள் கூறும் விளக்கம், “இந்த நாட்டில் ஒருவர் வாழ்வதா லேயே, அவருக்கு இந்த நாடு சொந்தமாகிவிடாது. இந்த நாட்டின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்கிறவர்களே-அதாவது, பிராமணியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்கிற வர்களே இந்த நாட்டுக்கு உரியவர்களாக ஆக முடியும்” என்கிறார்கள். அப்படி என்றால் காலம்காலமாய் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் பிற இந்துக்கள் அல்லாதவர்களும் இந்த நாட்டில் வாழக்கூடாது; இது அவர்க ளுக்குச் சொந்த நாடல்ல என்கிறார்கள். இவர்கள் கூறுகிற ‘ஒரேநாடு’ என்றால், அது ‘இந்து நாடு’. ஒரே கலாச்சாரம் என்றால், அது பிராமணியக் கலாச்சாரம்தான். ஒரே மதம் என்றால், அது ‘இந்து மதம்’தான். இதனைத்தான், நம் நாட்டி லுள்ள மதச் சிறுபான்மையினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்படி ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டுமே உண்மையான தேச பக்தர்களாம். பசுவைக் கொல்லக்கூடாது என்று சொல்லும் இவர்கள், அது பசு மீதுள்ள பாசத்தால் அல்ல; இதை வைத்து நாட்டில் கலகத்தை உருவாக்குவதுதான். பசுவைக் கொல்லக் கூடாது என்று சொல்லும் இவர்கள், ஆடு, கோழி போன்றவற்றைக் கொல்லக் கூடாது என்று ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? இப்படிச் சொன்னால், இந்துக்களே இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காகத்தானே? மாநிலங்களுக்கென்று, தனித்தனி சட்டமன்றங்கள், தனித்தனி நிர்வாக அமைப்பு கூடாது என்கிறார்கள். அதாவது, மாநில அரசுகளே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந் தம். மேலே தில்லியில் மத்திய அரசு, கீழே கிராமங்களில் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு. இவைதான் ஆர்.எஸ்.எஸ். கூறும் நிர்வாக அமைப்பு. அரசியல் சாசனத்தையே இதற்கு ஏற்றாற்போல் திருத்த வேண்டும் என்கிறார்கள்.  இந்த சிந்தனையைத்தான், அமித்ஷா மெல்ல அவிழ்த்து விட்டிருக்கிறார். பல கட்சி ஜனநாயகம் தேவையா என மக்கள் கருதுவதாக தனது கருத்தைக் கூறியுள்ளார்.

சிவசேனை
சிவசேனை கட்சியின் தலைவராக இருந்த பால்தாக்கரே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல. இவர் தென்னிந்தியர்களுக்கு எதிராகவும் குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராகவும் விஷத்தைக் கக்கியவர். பம்பாயி லும் மராட்டியத்திலும் தென்னிந்தியர் ஆதிக்கம் நிலவுகிறது; இதனை அனுமதிக்கக் கூடாது என்றவர்தான் பால்தாக்கரே. இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘மராட்டியர்கள் தங்கள் சொத்துக்களை வெளியாட்களுக்கு விற்கக் கூடாது; மராட்டி யர்கள் மராட்டியர் கடைகளில்தான் பொருட்கள் வாங்க வேண்டும்; ‘உடுப்பி ஓட்டல்’களைப் பகிஷ்கரியுங்கள்’என்றவர் பால்தாக்கரே. தென்னிந்தியர்களை மட்டுமல்ல, முஸ்லிம் சிறுபான்மை மக்களையும் கடுமையாக சிவசேனை மிரட்டியது. “முஸ்லிம்கள் இங்கே இருந்து கொண்டு, அவர்களின் பெரு மையைப் பேசுவார்களேயானால், அவர்களின் கால்களை வெட்டத் தயங்க மாட்டேன்” என்றவர் பால்தாக்கரே. சிவசேனை ஆட்சிக்கு வந்தால், அனைவரும் இந்து மதத்திற்கு மாறி விடவேண்டும்; ஒவ்வொரு மசூதியையும் தோண்டிப் பார்த்தால், அதன் அடியில் கண்டிப்பாக ஒரு கோயில் இருக்கும்” என்று மதவெறியைக் கிளறிவிட்டார்.அதன் பின்தான் நடந்தது பம்பாய்க் கலவரம். இந்தக் கலவரத்திற்கு வித்திட்டவர் பால்தாக்கரே.

‘பஜ்ரங்தள்’ என்னும் வானரப்படை
‘சாதுக்கள்’ என்று தங்களை அழைத்துக் கொண்ட ஒரு பயங்கரவாத அமைப்புதான் ’பஜ்ரங்தள்’ அனுமனுக்கு மற் றொரு பெயர்’பஜ்ரங்’ என்பதாகும். ஆக, இது ஒரு வானரப்படை - அதாவது ‘குரங்குப் படை.’ இது வினய் கத்தார் என்பவர் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. துணிச்சலோடு நாசச் செயல்களை எப்படிச் செய்வது என்பதுதான் இவர்களது பயிற்சியின் நோக்கம். அயோத்தி யில் பாபர் மசூதியை இடித்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள் இந்த வானரப் படை. மேலும், பாபர் மசூதியை இடித்தவர்களில் முக்கியமானவர்கள் மண்டல் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத் தில் பங்கு பெற்ற உயர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள். துப்பாக்கி சுடும் பயிற்சி, ஜூடோ, கராத்தே போன்ற பயிற்சி கள் இவர்களுக்கு அளிக்கப் படுகின்றன. ‘திரிசூலம்’ என்னும் யுத்தமுறை இவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்க ளுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்தப் பயிற்சி சொல்லித் தரப்படுகிறது. ஒற்றுமையாக வாழும் இந்திய மக்களிடையே, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பனவெல்லாம், இந்திய தேசத்தையும் ஜனநாயகக் கட்டமைப்பையும், மக்கள் ஒற்று மையையும் சிதைக்கிற இந்து மதவெறி அமைப்புகளின் பாசிச உண்மை முகங்கள் ஆகும். இந்த முகங்களின் இன்றைய இரட்டையர் வடிவம் தான் மோடி - அமித்ஷா. இந்தப் பாசிசக் கோர முகங்களின் முகமூடிகளை மக்கள் கிழித்தெறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கட்டுரையாளர்; 
சி.பி.ஐ.(எம்) நாகை மாவட்டச் செயலாளர்

 

;