பழனி, ஜூன் 27- பழனி அருகே போடுவார்பட்டி கிரா மத்தில்ஆறுமுகம் என்பவரது வீட்டை சுத்தம் செய்யும்போது இரண்டு பழைய கால நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் நந்தி வர்மன் ஆய்வு செய்தார். அவர் கூறியதா வது:- இரண்டும் பிரிட்டிஸ் இந்திய நாண யங்கள். வெள்ளியினால் செய்யப்பட்டுள்ளது. 1858-ஆம் ஆண்டு 250 ஆண்டுகளாக நடந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், விக்டோரியா ராணியின் நேரடி ஆட்சி இருந்தது. அப்போது வெள்ளி, செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. தற்போது இங்கு கிடைத்துள்ள இரண்டு நாணயங்களில் ஒன்றின் முன்புறத்தில் பேரரசி மகுடம் அணிந்து வேலைப்பாடு கள் நிறைந்த விலையுயர்ந்த உடுப்பு டன் தோன்றும் மார்பளவு உருவம் முத்தி ரையிடப்பட்டுள்ளது இடப்புறத்தில் விக்டோரியா என்றும், வலப்புறத்தில் ராணி எனவும் அச்சிடப்பட் டுள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆங்கி லத்தில் இரண்டு அணா இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது கடந்த, 1883-ஆம் ஆண்டு கல்கத்தா நாணயச் சாலையில் அடிக்கப்பட்ட இந்தக் காசு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட மிகச் சிறிய அளவிலானது (1.5 சென்டி மீட்டர் விட்டம் 4.71சுற்றளவு கொண்டுள்ளது) மற்றொரு காசு 3 செ.மீ விட்டம் 9.5 செ. மீ சுற்றளவு கொண்ட பெரிய காசாக உள்ளது 1918-ஆம் ஆண்டு அச்ச டிக்கப்பட்ட இந்த நாணயத்தின் ஒரு பக் கத்தின் வலதுபக்கம் ஜார்ஜ் ஐந்தாம் கிங் எனவும் இடதுபக்கம் எம்பரர் எனவும் ஜார்ஜ் மிக அழகிய வேலைப்பாடு நிறைந்த சட்டையும்,அழகிய கிரீடம் அணிந்த பட மும் மற்றொரு பக்கம் ஒரு ரூபாய் இந்தியா எனவும் அச்சடிக்கப்பட்டுள்ளது என்றார்.