tamilnadu

img

நேபாளம்: புயல் கூடிய கனமழை -28 பேர் பலி

நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து 128 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அம்மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 28 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாள மீட்புப் படையினர் தரப்பில், ''தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா மீட்புப் பணிகள் விரைந்து நடக்க ராணுவத்தினர் திரட்டப்பட்டதாகவும் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.


;