tamilnadu

img

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பெருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

;