world

img

தென்னாப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது  

தென்னாப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது.  

தென்னாப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன.

இதுவரை  வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 395ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி பலரும் காணாமல் போனதை தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறை, ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

;