நைஜீரியாவில் கப்பலில் வேலை பார்த்து வந்த 5 இந்தியர்கள் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
நைஜீரியாவில் தனியார் கப்பல் ஒன்றில் வேலை பார்த்து வந்த 5 இந்தியர்கள் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. கப்பலில் வேலை பார்த்து வந்த அவர்கள் கடத்தப்பட்டு 2 வாரங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. வீரர்களின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக தங்களால் வீரர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளது. கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கப்பலின் உரிமையாளர் புபேந்தரை தொடர்பு கொண்ட பொழுது அவர்களை பத்திரமாக மீட்க இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்நாட்டுத்தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளது. கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கப்பலின் உரிமையாளர் புபேந்தரை தொடர்பு கொண்ட பொழுது அவர்களை பத்திரமாக மீட்க இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.