நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கயில் எச்சில் துப்பினால் ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- புகையிலை, பான் மசாலா, குட்கா, வெற்றிலை பாக்கு ஆகியவற்றைமென்று பொது இடங்களில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கண்காணிப்பு மற்றும் வசூலில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபடுவார்கள். இந்த உத்தரவுக்கு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.